இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது: பொன். மாணிக்கவேல் அதிரடி

இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி என்பவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் அத்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நடவடிக்கையின் பேரில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை முறைகேடு வழக்கில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply