shadow

இந்திய விமானப்படையில் மேலும் இரு பெண் விமானிகள்: சச்சின் வாழ்த்து

இந்திய விமானப்படையில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு புதிய பெண் விமானிகள் விமானப்படையில் தேர்வாகியுள்ளனர்.

பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகிய இருவருக்கும் இந்தியா முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டரில் இரண்டு பெண் விமானிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

200வது பைலட் பயிற்சி வகுப்பில் இந்த இரண்டு பெண்களும் தேர்வாகியிருப்பதாகவும், இவர்களுடன் சேர்த்து தற்போது ஐந்து பெண் விமானிகள் இந்திய விமானப்படையில் இருப்பதை பெருமையாக கருதுவதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார். சச்சினின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்களும், ரீடுவீட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply