இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு: மிஸ் பண்ணாம பாருங்க!

100 ஆண்டுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசித்து வரும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை காண வரும் 22ஆம் தேதி வாய்ப்பு கிடைத்துள்ளது

ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ள நிலையில் தற்போது முதல்முறையாக இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் இந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்பனை முடிந்துவிட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் இந்த போட்டியை பார்க்க தானும் ஆவலுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply