இந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

சர்வதேச இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளர்கள் தேவை என பிசிசிஐ சற்றுமுன் ஒரு அறிவிப்பை செய்துள்ளது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தோல்விக்குப் பின்னர் இந்திய அணியில் பெரும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பாக தோனி மற்றும் விராட் கோஹ்லி ஓய்வு அளிக்கப்படும் என்றும் தோனிக்கு நிரந்தரமாகவே அணியில் இனி இடம் கிடைப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரையும் மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனை உறுதி செய்வதைப் போல் சற்றுமுன் பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது

இந்த அறிவிப்பின்படி சர்வதேச கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், மருத்துவ சிகிச்சை மற்றும் உடல்நிலை பயிற்சியாளர், நிர்வாக அதிகாரி ஆகிய பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது

இதனை அடுத்து தற்போது பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரி உள்பட பலர் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply