இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 164 ரன்கள் எடுத்த நிலையில் அதன் பின்னர் 165 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றன

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த இஷான் கிஷானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கேப்டன் விராத் கோலி மிக அபாரமாக விளையாடி 73 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply