shadow

இந்திய அணியில் இருந்து தோனி திடீர் நீக்கம்

இந்திய கிரிக்கெட் அணியை வலுவான அணியாக மாற்ற அடித்தளம் போட்டவர் ‘தல’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி. இவர் அணியில் இருந்தாலே எதிரணி வீரர்களுக்கு கிலி ஏற்படும். இக்கட்டான நேரத்தில் தோனியின் அனுபவம் மற்றும் அறிவுரை கேப்டன் விராத்கோஹ்லிக்கு தேவைப்படும் என்பதாலே இவர் அணியில் நீடித்து வருகிறார்.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர்களில் இருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தோனி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோனி நீக்கப்பட்டிருந்தாலும் டி-20 அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குர்னல் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளதால் தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ள ஆறுதல் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.அ

Leave a Reply