இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? ரிஷப் பண்ட் விஸ்வரூபத்தால் குழப்பம்

இந்திய அணியில் தற்போது சாஹா விக்கெட் கீப்பராக இருந்துவரும் நிலையில் நேற்றைய பயிற்சிப் போட்டியில் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடியதை அடுத்து தேர்வு குழுவினர் யாரை விக்கெட் கீப்பராக நியமனம் செய்யலாம் என்ற குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 70 ரன்கள் அடித்த ரிஷப் பண்ட், தேர்வு குழுவினரின் கவனத்தை கவர்ந்துள்ளார். இதனையடுத்து அவர் வரும் 21ஆம் தேதி நடைபெறும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்டில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

ரிஷப் பண்ட் ஒருவேளை அணியில் இடம்பெற்றால் சாகா அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என தெரிகிறது. ரிஷப் பண்ட் இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply