shadow

இந்தியா பாகிஸ்தான் நாடுகள் அமைதி காக்க வேண்டும்: சீனா அறிவுரை

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியாவின் பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2 நேற்று நடந்துள்ளதை அடுத்து உலக நாடுகள் இந்தியா-பாகிஸ்தான் போர் மூளுமா? என்ற அச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் அமைதி காக்க வேண்டும்’ என, சீனா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், லு காங்., பீஜிங்கில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பாகிஸ்தானில், இந்திய விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதல் சம்பவம் குறித்த தகவல்களை கேட்டறிந்துள்ளோம். இந்த விஷயத்தில், இந்தியாவும், பாகிஸ்தான் நாடுக்ள் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அதே நேரத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்தியா கூறியுள்ளது. இத்தகைய நடவடிக்கைக்கு, உலக நாடுகளின் ஒத்துழைப்பு இந்தியாவுக்கு தேவை. அதற்கு சாதகமான சூழலை, சர்வதேச அளவில் இந்தியா உருவாக்க வேண்டும்.

இவ்வாறு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், லு காங் தெரிவித்தார்.

Leave a Reply