இந்தியா உதவினால் சூதாட்டத்தை ஒழிக்கலாம்: அர்ஜூனா ரணதுங்கா
கிரிக்கெட்டில் நிலவி வரும் சூதாட்ட விவகாரம் மற்றும் ஊழல்களை ஒழிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா கூறியுள்ளார்.
தற்போது இலங்கையின் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருக்கும் அர்ஜூனா ரணதுங்கா இதுகுறித்து மேலும் கூறியதாவது:- இலங்கை கிரிக்கெட்டில் நிலவி வரும் சூதாட்ட விவகாரம், முறைகேடு, ஊழல்களை ஒழிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம். சி.பி.ஐ அமைப்பு எங்களுக்கு எல்லா வகையிலும் உதவி அளிக்க இருக்கிறது.
சூதாட்டத்தை ஒழிக்க வேண்டிய விதி முறைகளும் ஏற்படுத்தப்படும். இது தொடர்பான சட்ட வரையறையை உருவாக்கி தர இந்தியா முன் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.