இந்தியா அபார வெற்றி: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்க தேச அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ரன்கள் எடுத்த்து. ரோஹித் சர்மா 104 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்களும் எடுத்தனர்.

315 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 48 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சதமடித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply