இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்கு: முதல் ஓவரிலேயே விக்கெட் இழந்த இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தற்போது ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அந்த அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குப்தில் மற்றும் செய்ஃபர்ட் தலா 33 ரன்களும் முன்ரோ 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் புமா, தாகூர் மற்றும் டூபே தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்

இந்த நிலையில் 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிவரும் இந்திய அணி முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தது. தற்போது கேஎல் ராகுல் 20 ரன்களுடனும் கேப்டன் விராட் கோலி 11 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply