shadow

இது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரனுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் குற்றப்பத்ரிக்கை தாக்கல் செய்தது. அதன்படி தினகரன் மீது மோசடி, சாட்சியங்களை கலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் செய்ததற்கான முகாந்தரம் உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுகுறித்து தினகரன் கூறியபோது, ‘சிலரது சதியால், இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply