இது சிறுத்தையின் கூட்டம் ஜாக்கிரதை! மத்திய அரசை எச்சரித்த துரைமுருகன்

மத்திய அரசின் திட்டங்களான ஹைட்ரோகார்பன், நீட், நெடுவாசல், உள்பட பல திட்டங்களுக்கு பெயரளவில் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசியல் கட்சிகள் ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கைக்கு கொந்தளித்து எழுந்துள்ளது.

தமிழ் மொழியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரப்புவோம் என்று எந்த அரசியல்வாதியும் இதுவரை சொன்னதுமில்லை, செய்ததுமில்லை. ஆனால் இந்தி மொழி எதிர்ப்பை மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது

இந்த நிலையில் இன்று திருவண்ணாமலையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியபோது ‘எந்த காலத்தில் ஒரே மொழி ஒரு நாட்டை ஆண்டது என கேள்வி எழுப்பியதோடு எங்களை மிரட்டி பார்க்கின்றீர்களா ? இது சிறுத்தையின் கூட்டம் ஜாக்கிரதை என எச்சரிக்கையும் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply