இதுதான் பள்ளியின் கழிவறையா? பெற்றோர்கள் ஆவேசம்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கட்னி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவ, மாணவிகள் பயன்படுத்த கழிவறை இல்லாததால் பெரும் அவதியில் உள்ளனர். அதேபோல் மாணவ, மாணவிகளுக்கு குடிதண்ணீர் வசதியும் இல்லை
கழிவறை, குடிதண்ணீர் தேடி மாணவர்கள் செல்வதால் அவர்களது படிப்பு பாதிக்கப்படுவதாக இந்த பள்ளியின் ஆசிரியர் அரசுக்கு புகார் அனுப்பியுள்ளார். இருப்பினும் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
இதனையடுத்து பெற்றோர்கள் ஆவேசமாகி போராட்டம் செய்ய தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.