இதுதான் கண்ணியமா? முன்பும், பின்பும் கூறுங்கள்: குருமூர்த்தி கண்டிப்பு

நான் கூறியதை முழுமையாக கூறாமல் நடுவில் கூறியதை மட்டும் திரித்து பேசுவது கண்ணியம் அல்ல என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஓபிஎஸ்சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலா விடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை

இதை ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே, ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசியை எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓபிஎஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.

எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து. இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்.

முன்னதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஓபிஎஸ், குருமூர்த்தி, துக்ளக், அதிமுக,

Leave a Reply