இட ஒதுக்கீடு கேட்டு சட்டசபை முன் போராட்டம்: பெங்களூரில் பரபரப்பு

கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வரும் வால்மிகி சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்கள் இனத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பெங்களூரில் உள்ள சட்டமன்ற அலுவலக கட்டிடமான விதான் செளதா முன்னிலையில் குவிந்த வால்மிகி சமூகத்தினர் தங்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதனால் விதான் செளதா பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply