shadow

இடைத்தேர்தல் ரத்து: மு.க.ஸ்டாலின் கருத்து

ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்திருக்கும் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள் என்றும், காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இதில் இருந்து தேர்தல் ரத்து என்பது திமுகவுக்கும் உடன்பாடே என தெரிகிறது. மேலும் இப்போதைக்கு தேர்தலை எதிர்கொள்ள எந்த கட்சிக்கும் தைரியம் இல்லை என்பதும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

 

Leave a Reply