shadow

இடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்


நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்

மேலும் 2021ல் தான் சட்டமன்ற தேர்தல் வரும் என்றும், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என ஸ்டாலின் எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

தேர்தல் நேரத்திலேயே கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என்றும் அதிமுக ஆட்சி மீது புழுதிவாரி தூற்ற வேண்டும் என்பதே கமலின் ஒரே எண்ணம் என்றும் யார் பலமானவர்கள், பலவீனமானவர்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

Leave a Reply