shadow

இங்கிலாந்து பிரதமர் தெரசா ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது குறித்த பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. இதனால் பிரதமர் தெரசா மே கடும் நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது

நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் பிரதமர் தெரசா அரசு மீது நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய பிரதமர் தெரசா மே, தமது அரசால், 34 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தெரசா மே அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டதாகவும் எதிர்கட்சி தலைவர் ஜெர்மி கார்பின் குறிப்பிட்டார்.

இரு தரப்பு விவாதங்களுக்கு பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 306 வாக்குகளும், எதிராக 325 வாக்குகளும் பதிவாகியது. இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்து. தெரசா மே தலைமையிலான ஆட்சி தப்பித்தது

Leave a Reply