shadow

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ்: செரினாவை வெளியேற்றிய வீராங்கனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் அமெரிக்காவின் செரினாவை செக்குடியரசு வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனால் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்டின் சாதனையை சமன் செய்ய நினைத்த செரினாவின் கனவு தகர்ந்தது.

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்ஸை செக்குடியரசு வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக கரோலினா பிளிஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Leave a Reply