ஆவணங்கள் இன்றி எவ்வளவு எடுத்துச் செல்லலாம்?- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை முறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்பவர்கள் பிடிபட்டு வருகின்றனர்.

தேர்தல் அறிவிப்புக்கு பின் இரண்டே நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.2 கோடிக்கும் மேல் பறக்கும் படையினர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் தனி ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் ஆவணம் இல்லாமல் ரூ.10 லட்சத்துக்கு மேல் கொண்டு சென்றால், வருமான வரித்துறையிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

 

Leave a Reply