ஆள்கடத்தல் வழக்கு: பிக்பாஸ் வனிதா கைதா?
ஆள்கடத்தல் வழக்கில் வனிதா விஜயகுமாரிடம் விசாரணை செய்வதற்காக சென்னை செம்பரம்பாக்கத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் வீட்டிற்குள் தெலங்கானா போலீசார் சென்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
வனிதாவின் முன்னாள் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு வனிதா மீது தெலுங்கானா போலீஸ் ஆள்கடத்தல் வழக்கை பதிவு செய்தனர்.
இதுகுறித்து விசாரணை செய்ய சென்னை வந்துள்ள தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் வனிதா கைது செய்யப்படுவாரா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.