shadow

ஆளுனரை முதல்வர் உடனே சந்திக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுவிக்க வலியுறுத்தும் வகையில் தமிழக ஆளுனரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனே சந்திக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதை முதல்வர் தட்டிக்கேட்கவில்லை என்றும், அந்த தீர்மானத்தின்படி 7 பேரை விடுவிக்க வலியுறுத்தும் வகையில் ஆளுனரை முதல்வர் சந்திக்க வேண்டும் என்றும் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் குறித்து கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply