தமிழிசை உருக்கம்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி வசந்த குமார் நேற்ற்ய் காலமான நிலையில் அவருடைய மறைவிற்கு தெலுங்கானா ஆளுநரும், வசந்தகுமாரின் அண்ணன் குமரி அனந்தனின் மகளுமான தமிழிசை சௌந்தராஜன் உருக்கமான தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சித்தப்பா !நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது…என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்…அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்…குமரியில் பிறந்து இமயம் வரை பரவிய கறுப்புத் தமிழர்.. எம்பி வசந்தகுமார் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்! இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு,தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும்,துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்…

சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது ,சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது…வசந்த் கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது…கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் …கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது…ஆளுநராக இருந்தாலும்அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்..

இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply