shadow

ஆலயம் கனவில் வந்தால் என்ன நடக்கும்?

templeகோயிலைக் கனவில் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் வியாபாரம் முன்னேறும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகுக்கும். புனித யாத்திரைகளையும் மேற்கொள்ள நேரிடலாம். ஆனால், பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் காண்பது கூடாது. முன்னதற்கு நேர்மாறான பலன்களைத் தரும். முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும் பொருள் நஷ்டமும் உண்டாகும்.

ஆலயத்தில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு தோன்றும் எனில், ஈடுபடும் செயல்களில் முதலில் சில முட்டுக்கட்டைகள் எதிர்ப்படும். ஆனாலும் தெய்வத்தின் அருளால் முடிவில் செயல் நன்மை யாகவே முடியும்.

கனவில், ஆலய மணியோசையைக் கேட்பதாக உணர்ந்தால், அதற்கும் பலன் உண்டு. ஆலய மணியோசை ஒரே சீராக ஒலிக்கும் எனில், மக்கள் சந்ததியற்றவர்களுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும். பொருள் வரவும் பெருகும். ஆனால், மணியோசை சீரற்றதாக ஒலிக்குமானால் பல சிக்கல்கள் குறுக்கிடுவதோடு பொருள் நஷ்டமும் உண்டாகும்.

Leave a Reply