ஆலமரத்தை படத்தில் பார்த்து கும்பிடும் பெண்கள்!
முன்பெல்லாம் ஊருக்கு ஒரு ஆலமரம் இருக்கும். வழிப்போக்கர்களுக்கு நிழலாய் பிரமாண்டமாக இருக்கும் ஆலமரங்கள் மனிதர்களுக்கு பல்வேறு நன்மைகளை கொடுத்துள்ளது
ஆனால் தற்போது ஆலமரத்தையே பார்க்க முடிவதில்லை. பல்வேறு காரணங்களுக்காக ஆலமரங்களை வெட்டி எடுத்ததும், புதிய ஆலமரங்களை தோற்றுவிப்பதும் இல்லை.
இந்த நிலையில் ஒரு விழாவில் ஆலமரம் ஸ்டிக்கர் ஒன்றை பார்த்து பெண்கள் சிலர் தொட்டு கும்பிட்டுள்ளனர். ஆலமரத்தை இனி ஸ்டிக்கரில் மட்டுமே வருங்கால சந்ததியினர் பார்க்கும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே அரசு ஆங்காங்கே ஆலமரங்களை தோற்றுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.