shadow

ஆறுமுகச்சாமி ஆணையத்தின் விசாரணை முடிகிறதா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதியரசர் ஆறுமுகச்சாமி ஆணையம் கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விசாரணை வரும் 29ஆம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆணையத்தில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகுவதாக இருந்தது. ஆனால் திடீரென இந்த விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் அன்றைய தினம் ஓபிஎஸ் விசாரணை முடிந்ததும் மொத்த விசாரணையும் முடிவடையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் சசிகலா, மு.க.ஸ்டாலின் ஆகியோர்களிடம் இந்த ஆணையம் விசாரணை செய்யும் என செய்திகள் வெளிவந்துள்ளதால் இவர்கள் இருவரும் 29ஆம் தேதிக்குள் ஆஜராவார்களா? அல்லது இவர்களிடம் நடத்த திட்டமிட்டிருந்த விசாரணை ரத்து செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

 

Leave a Reply