shadow

ஆர்.கே.நகர் வாக்குப்பதி தேர்தல் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கவிருப்பதால் இதுவரை இல்லாத வகையில் உச்சகட்ட பாதுகாப்பு தொகுதி முழுவதிலும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பதட்டம் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் வாக்குப்பதிவின்போது எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் மிகவும் கவனமாக உள்ளது. காலை 8 மணி முதல் வாக்குப்பதிவை நேரடியாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

மேலும் சற்றுமுன்னர் சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளதன்படி, ‘வாக்குப்பதிவின்போது பிரச்சனை செய்தாலோ, வாக்களிப்பவர்களுக்கு இடைஞ்சல் நேரும்படி நடந்து கொண்டாலோ உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply