ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தா? சிறப்பு தேர்தல் அதிகாரி டெல்லி விரைந்ததால் பரபரப்பு
கடந்த மார்ச் மாதம் ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தப்பட்டபோது அந்த தொகுதியில் அதிகளவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக காரணம் கூறப்பட்டது. ஆனால் தற்போது கடந்த முறையை அதிகளவு பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட விக்ரம் பத்ராவிடம் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார்கள் கூறி வருகின்றன. இதனால் தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்த நிலையில் சற்றுமுன்னர் திடீரென தேர்தல் சிறப்பு அதிகாரி டெல்லி விரைந்துள்ளார்
வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட விக்ரம் பந்த்ராவும் திடீரென டெல்லி செல்வது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.