ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளுபடி செய்ய தாக்கல் செய்த மனு: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை ஆர்.கே.நகரில் நாளை இடைத்தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோவையை சேர்ந்த முகமது ரபீக் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு சற்றுமுன்னர் விசாரணைக்கு வந்தபோது இடைத் தேர்தலை ரத்து செய்ய முடியாது என்று கூற டெல்லி ஐகோர்ட் நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.