ஆர்.கே.நகரில் தினகரன் ஜெயிப்பது உறுதியா?
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று கடைசி நேரத்தில் வாக்களித்த பலர் குக்கர் சின்னத்தின் பட்டன் அதிக முறை அழுத்தியதன் காரணமாக தேய்மானத்துடன் இருந்ததாக வெளியே வந்து குறிப்பிட்டனர்
இதனால் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு அதிக வாக்குகள் பதிவாகியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஆர்.கே.நகரில் 77% ஓட்டுப்பதிவு என்பது ஆச்சரியம் தரத்தக்க அம்சம் ஆகும். அரசியல் கட்சிகளால் பொதுமக்கள் வேதனை அடைந்திருந்த நிலையில் பொதுமக்கள் இந்த அளவுக்கு ஆர்வத்துடன் வாக்களித்ததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.