shadow

ஆர்கே நகரில் பெற்ற வெற்றி தொடரும்: டிடிவி தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக, திமுக என இரண்டு பெரிய திராவிட கட்சிகளை தோற்கடித்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அதிலும் குறிப்பாக திமுக இந்த தொகுதியில் டெபாசிட் இழந்தது

இந்த நிலையில் ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததால் திருப்பரங்குன்றம் தொகுதியிலும் கருணாநிதி மரணம் அடைந்ததால் திருவாரூர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆர்கே நகரில் பெற்ற வெற்றி திருவாரூர், திருப்பரங்குன்றத்திலும் தொடரும் என டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். ஒருபக்கம் ஆளுங்கட்சியாக வெற்றி பெற வேண்டிய நிலையில் அதிமுகவும், திமுகவின் புதிய தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் திமுகவும் இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் டிடிவி தினகரன் இவ்வாறு கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply