ஆரம்பத்திலேயே அடிச்சு தூக்கிய ஆம் ஆத்மி!

டெல்லியில் கடந்த எட்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று கூறியது அதுமட்டுமின்றி பாஜகவிற்கு பத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் பெரும்பாலான கருத்துக்கள் கூறினார்

ஆனால் கருத்துக்கணிப்பை மீறி தற்போது காங்கிரஸ் கட்சியை மூன்று தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கருத்துக்கணிப்புகள் கூறியபடி ஆம் ஆத்மி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது என்பதும் பாஜக 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையின் நிலவரத்திலேயே அடிச்சு தூக்கிய ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply