ஆரணி எம்பியிடம் இருந்து கைப்பற்றிய ரூ.20 லட்சத்தை திருப்பி கொடுத்த பறக்கும் படை! ஏன்?
தகுந்த ஆவணங்களை காட்டியதால் ஆரணி அதிமுக எம்பி ஏழுமலையிடம் ரூ.20 லட்சத்தை வருமான வரித்துறை திரும்ப ஒப்படைத்தது
நாளை தமிழகத்தில் 4 தொகுதிகளில் இடைதேர்தல் நடைபெறவுள்ளதால் பறக்கும் படையினர் தீவிரமாக பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியிலிருந்து விமானத்தில் ரூ.20 லட்சம் எடுத்து வந்ததால் ஏழுமலையிடம் வருமானவரித்துறை விசாரணை நடத்தினர். ஆனால் தனது மகளின் மேற்படிப்புக்காக எடுத்து வந்ததாக ஏழுமலை விளக்கமளித்ததை அடுத்து ஏழுமலையிடம் இருந்து கைப்பற்றப்பட பணத்தை அவரிடம் திருப்பி கொடுத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.