சென்னைக்கு அருகே உத்திரமேரூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மகா சபை நடந்துள்ளது என வரலாற்று சான்று கிடைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் பஞ்சாயத்து நடந்தததற்கான ஆதாரங்கள் உத்திரமேரூரில் கிடைத்துள்ளன என்றும்,
மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றியும், உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

மக்கள் சபை நடந்தது பற்றி, கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது என கூறிய பிரதமர் மோடி இந்தியா தனது 75வது பிறந்த தினத்தைக் கொண்டாடும்போது நமது நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுவதாக தெரிவித்தார்.

இந்திய ஜனநாயக வரலாற்றில் இன்று மிகப்பெரிய மைல்கல் என்றும், புதிய நாடாளுமன்றம் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான சாட்சியாக திகழும் என மோடி தெரிவித்தார்

Leave a Reply