பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தபோது ஆம்புலன்சை காக்க வைத்துவிட்டு அந்த நோயாளி பக்கோடா வாங்கி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தென்காசி மாவட்டம் புளியங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த பெரியவர் ஒருவருக்கு கொரோனா உறுதியான தகவல்கள் வந்ததை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது
இந்த நிலையில் அந்தப் பெரியவர் ஆம்புலன்சை காக்க வைத்துவிட்டு பக்கத்திலிருந்த மிட்டாய் கடையில் மிட்டாய்கள், பக்கோடா உள்பட தின்பண்டங்களை கிலோ கணக்கில் வாங்கி உள்ளார்
அவர் பக்கோடா வாங்கும் வரை பொறுமையாக காத்திருந்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பின்னர் அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.