பொதுமக்கள் அதிர்ச்சி

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்க நினைக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரு சவரன் விலை ரூ.39,824 ஆக அதிகரிப்பு என்றும், தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது என்றும் கூறப்படுகிறது

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சர்வதேச சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலையில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

Leave a Reply