ஆன்லைன் பொறியியல் கல்லூரி சேர்க்கையில் முறைகேடா?

ஆன்லைன் வழியிலான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு செய்துள்ளது. 100 விழுக்காடு வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தனியார் கல்லுாரிகள், மாணவர்களின் கடவுச்சொல், மின்னஞ்சல் முகவரியை பெற்று, தங்கள் கல்லுாரியை மாணவர்கள் தேர்வு செய்தது போல், இணையதளத்தில் பதிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது

மாணவர்கள், தங்களுடைய கடவுச்சொல் உள்ளிட்ட ரகசிய எண்களை, யாரிடமும் தெரிவிக்க கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது

Leave a Reply