shadow

ஆந்திரா இந்தியாவில் தான் இருக்கிறதா? முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி

நேற்று மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பட்ஜெட் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பயனுள்ள பட்ஜெட் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்திருக்கும் நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:

ஆந்திர மக்களுக்கு மோடி அரசு துரோகம் செய்து வருகிறது. இந்த பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. ஆந்திரா இந்தியாவில் தான் இருக்கிறதா ?பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமானதாக மோடி ஆட்சி உள்ளது என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Leave a Reply