ஆதார்-பான் அட்டைகள் இணைப்பு: வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு

ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்க வேண்டியது கட்டாயம் என்றும் வருமான வரித்துறை ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது தெரிந்ததே

ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைக்க ஏற்கனவே பல காலக்கெடுகள் கொடுத்த நிலையில் இன்றுடன் அதாவது 2019, மார்ச் 31ஆம் தேதியுடன் அந்த முடிவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வருமான வரித்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாகவும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31-க்குள் ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைக்க வேண்டும் என்றும் இதற்கு மேல் கால அவகாசம் வழங்கபப்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து இதுவரை ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது

Leave a Reply