ஆதார் அட்டை பெற்ற 127 பேருக்கு நோட்டீஸ்: பெரும் பரபரப்பு
பொய் தகவலை அளித்து ஆதார் அட்டை பெற்ற 127 பேருக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு ஆதார் எண் அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பொய் தகவலை கொடுத்து ஆதார் எண் பெற்றதாக 127 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனவே இது குறித்து வரும் 20ஆம் தேதி 127 பேரும் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது இந்த புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய ஆதார் எண் மட்டும் ரத்து செய்யப்படும் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.