ஆதார் அட்டையால் பிடிபட்ட திருடன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மால் ஒன்றில் புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற திருடன் தவறுதலாக தனது ஆதார் அட்டையை வைத்திருந்த பர்ஸை தொலைத்துவிட்டதால் போலீசார் எளிதாக அவனை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

நீரஜ் என்ற அந்த நபர் கடையின் மேல்பகுதியை துளை போட்டு நுழைந்து கடையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்தான். அவன் முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவான போது முந்தைய குற்றவாளிகள் பட்டியலில் அவன் இல்லாததால் அவனை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், துளையிடப்பட்ட கடையின் மேற்கூரையை சீரமைக்க கடைக்காரர் முயன்ற போது திருடன் விட்டுச் சென்ற மணிபர்ஸ் சிக்கியது. அதிலிருந்த ஆதார் அட்டை மூலம் போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.

Leave a Reply