shadow

ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதல் பெண் நடுவர்

இதுவரை ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில் முதல்முறையாக பெண் நடுவர் ஒருவர் ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் என்ற 29 வயது பெண் நடுவர் கடந்த 2 ஆண்டுகளாக பெண்களுக்கான உலகக் கோப்பை தொடர் உள்பட பல போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு இவர் நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் கிளாரியும், பால் வில்சனும் நடுவர்களாக பணிபுரிவார்கள்

இதுகுறித்து கிளாரி பேசுகையில், ‘நான் கிரிக்கெட் விளையாடியதில்லை. ஆனால் எனக்கு கிரிகெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. என் பெற்றோரின் தூண்டுதல் தான், நான் நடுவர் ஆனதற்கு காரணம். இதுவரை பல முறை நடுவர் தேர்வில் தோல்வியடைந்துள்ளேன். கடின முயற்சிக்கு பின்னரே நடுவர் தேர்வில் வெற்றி பெற்றேன். இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவேன்’ என கூறினார்.

Leave a Reply