shadow

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆக்சிஜன், ரெம்டிசிவிர் மருந்துகள் உள்பட பல பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் உள்ளது

சாலையில் எந்த நேரமும் ஆம்புலன்ஸ் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் போபால் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவையே ஆம்புலன்ஸ் ஆக மாற்றியுள்ளார்

அந்த ஆட்டோ ஆம்புலன்சில் ஆக்சிஜன் முதல் சானிடைசர் வரை வசதி வைத்துள்ளார். மேலும் அவர் நோயாளிகளுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாகவே இந்த சேவையை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இந்த சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது

Leave a Reply