ஆட்டம் போட்ட இந்தியாவை அடக்கிய நியூசிலாந்து!

நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரை 5-0 என்று வெற்றி பெற்ற இந்தியா தற்போது ஒருநாள் தொடரை 3-0 என இழந்துள்ளது

இந்திய கிரிக்கெட் அணி தொடர் வெற்றியை பெற்று வந்த நிலையில் தற்போது தொடர் தோல்வியை பெற்று வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது

இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. கிராந்தோம் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். மேலும் தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில் 66 ரன்களும், நிக்கோலச் 80 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply