ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை நிறுத்திய காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்

நாகை மாவட்டம் இளையமதுகூடம் என்ற கிராமத்தில் கோவில் திருவிழா ஒன்று நேற்றிரவு நடைபெற்றது. இந்த திருவிழாவில் அனுமதியின்றி நடைபெற்ற ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை திருவெண்காடு காவல் ஆய்வாளர் சுப்ரியா அதிரடியாக நிறுத்தினார்

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியில் உள்ள மர்ம நபர்கள் சிலர் காவல் ஆய்வாளர் சுப்ரியாவை கண்மூடித்தனமாக கல்லால் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதனையடுத்து சுப்ரியா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவெண்காடு காவல் ஆய்வாளர் சுப்ரியாவை கல்லால் அடித்து தாக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.,

Leave a Reply