பிரதமர் மோடி அறிவிப்பின் பின்னணி என்ன?

அவசர காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத் துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது நேற்று முதல் நாடு முழுவதும் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து போதிய சிகிச்சை வசதிகளை உறுதி செய்ய அறிவுறுத்திய பிரதமர் மோடி அவர்கள் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த அவசரகால நிலைமை சுகாதாரத்துறையினர்களுக்கு மட்டுமா அல்லது பொதுமக்களுக்கு சேர்த்தா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது

Leave a Reply