தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் 10 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

இருப்பினும் மாணவர்களின் வருகை கட்டாயமில்லை என்றும் பெற்றோர்களிடம் அனுமதி கடிதம் வாங்கி வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அக்டோபர் 1ஆம் தேதி அவசரகதியில் பள்ளிகளை திறப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளார்

மாணவர்களின் பாதுகாப்பை அதிமுக அரசு விளையாட்டாக நினைப்பதாகவும் வீட்டில் கடிதம் வாங்கி வரச்சொல்லி பழியை பெற்றோர் மீது போட நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply