shadow

அழகு நிலைய பெண்ணை தாக்கியவர் சஸ்பெண்ட்: ஸ்டாலின் அதிரடி

திமுக பிரமுகர் செல்வகுமார் என்பவர் பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வரும் சத்யா என்ற பெண்ணை தாக்கியது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செல்வகுமாரை மு.க.ஸ்டாலின் சஸ்பெண்ட் செய்துள்ளார்

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்சினைகள் – விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது!

தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என – யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply