shadow

அழகிரி கூட்டிய அமைதிப்பேரணி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

நேற்று மு.க.அழகிரி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 30வது நினைவு நாளை அடுத்து சென்னையில் ஒரு அமைதிப்பேரணியை கூட்டினார். இந்த பேரணியில் சுமார் 1.5 பேர் கலந்து கொண்டதாக அழகிரி கூறியபோதிலும் ஊடகங்களின் கணிப்பின்படி ஒருசில ஆயிரம் பேர்கள் மட்டுமே கூடியதாக தெரிகிறது. மேலும் இந்த அமைதிப்பேரணி திமுகவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை

இந்த நிலையில் சென்னையில் அழகிரி கூட்டிய அமைதிப்பேரணி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுகு அளித்த பேட்டியின்போது கூறினார்.

மேலும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், பாஜக இன்றி அரசியலில் ஒரு அணுவும் அசையாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply